Thursday, November 27, 2014
உரம் விற்பனை தொடர்பாக விவசாயிகள் பல புகார்களை தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் பி.சந்தானகிருஷ்ணன் ஆலோசனைப்படி துணை இயக்குனர் ஏ.மகேந்திரன் (திருப்பூர்), உதவி இயக்குனர்கள் ஞானசேகரன் (மூலனூர்), செல்வராஜன் (திருப்பூர்),ஆர்.சிவக்குமார் (அவினாசி), உடுமலை வோளண்மை அலுவலர் ச.நாகராஜன் ஆகியோர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவினர் உடுமலையில் உள்ள உரக்கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது 5 மொத்த உர விற்பனை நிலையங்களில் உர உரிமம், உரம் இருப்பு, விற்பனை விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் உரம் விற்பனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையொட்டி 5 மொத்த உர விற்பனை நிலையங்களில் 687டன் உரங் களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.1கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து உர கட்டுப்பாடு சட்டம் 1985–ன் படி உரச்சட்டத்திற்கு உட்பட்டு உரம் விற்கவும், விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கு விவசாயிகளிடம் கையொப்பம் பெற்றும், இருப்பு பதிவேட்டில் விற்பனை விபரம் குறித்து அவ்வப்போது பதிவு செய்து மீதி இருப்பை குறிப்பிட்டுவைக்கவும் உர விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் உரம் பதுக்குவது மற்றும் அளவுக்கு அதிகமாக உரம் இருப்பு வைத்து விற்பனை செய்வது குறித்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளால் உர விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விவசாயிகள் உரம் வாங்கும் போது உரிய ரசீது கேட்டு பெற்று கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...

0 comments:
Post a Comment