Thursday, November 27, 2014
திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் ரவி என்கிற ராமலிங்கம்(வயது 48). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். மேலும் திருப்பூர் மாநகரில் 3 கிளைகள் அமைத்து பேக்கரி நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக உள்ளார். இவருடையை மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரனேவ்(14), பிரனவ்(14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இருவரும் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராமலிங்கத்துக்கு சென்னை தியாகராய நகர் நீலகண்டமேத்தாத் தெருவில் பனியன் எம்ப்ராய்டரி நிறுவனமும் வீடும் உள்ளது. பனியன் வர்த்தகம் தொடர்பாக சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு மாதம் ஒரு முறை வந்து அங்குள்ள வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பணிகளை முடித்து விட்டு பின்னர் ராமலிங்கம் திருப்பூர் திரும்புவது வழக்கம்.
அதுபோல் ராமலிங்கம் சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு வந்துள்ளார். இந்தநிலையில் எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு அருகே உள்ள வீட்டில் ராமலிங்கம் தனியாக நேற்றுமுன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை ராமலிங்கம் அறையில் இருந்து வெளியே வரவில்லை. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கத்தின் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் ராமலிங்கத்தின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது.
ராமலிங்கம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. என்றாலும் வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த திருப்பூர் தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment