Thursday, November 27, 2014
திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் ரவி என்கிற ராமலிங்கம்(வயது 48). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். மேலும் திருப்பூர் மாநகரில் 3 கிளைகள் அமைத்து பேக்கரி நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக உள்ளார். இவருடையை மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரனேவ்(14), பிரனவ்(14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இருவரும் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராமலிங்கத்துக்கு சென்னை தியாகராய நகர் நீலகண்டமேத்தாத் தெருவில் பனியன் எம்ப்ராய்டரி நிறுவனமும் வீடும் உள்ளது. பனியன் வர்த்தகம் தொடர்பாக சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு மாதம் ஒரு முறை வந்து அங்குள்ள வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பணிகளை முடித்து விட்டு பின்னர் ராமலிங்கம் திருப்பூர் திரும்புவது வழக்கம்.
அதுபோல் ராமலிங்கம் சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு வந்துள்ளார். இந்தநிலையில் எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு அருகே உள்ள வீட்டில் ராமலிங்கம் தனியாக நேற்றுமுன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை ராமலிங்கம் அறையில் இருந்து வெளியே வரவில்லை. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கத்தின் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் ராமலிங்கத்தின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது.
ராமலிங்கம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. என்றாலும் வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த திருப்பூர் தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...

0 comments:
Post a Comment