Thursday, November 27, 2014
திருப்பூர் பெரியார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் ரவி என்கிற ராமலிங்கம்(வயது 48). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். மேலும் திருப்பூர் மாநகரில் 3 கிளைகள் அமைத்து பேக்கரி நிறுவனம் வைத்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக உள்ளார். இவருடையை மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரனேவ்(14), பிரனவ்(14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இருவரும் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
ராமலிங்கத்துக்கு சென்னை தியாகராய நகர் நீலகண்டமேத்தாத் தெருவில் பனியன் எம்ப்ராய்டரி நிறுவனமும் வீடும் உள்ளது. பனியன் வர்த்தகம் தொடர்பாக சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு மாதம் ஒரு முறை வந்து அங்குள்ள வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பணிகளை முடித்து விட்டு பின்னர் ராமலிங்கம் திருப்பூர் திரும்புவது வழக்கம்.
அதுபோல் ராமலிங்கம் சென்னையில் உள்ள எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு வந்துள்ளார். இந்தநிலையில் எம்ப்ராய்டரி நிறுவனத்துக்கு அருகே உள்ள வீட்டில் ராமலிங்கம் தனியாக நேற்றுமுன்தினம் இரவு தங்கியிருந்தார். நேற்று காலை ராமலிங்கம் அறையில் இருந்து வெளியே வரவில்லை. ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ராமலிங்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமலிங்கத்தின் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் ராமலிங்கத்தின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடல் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது.
ராமலிங்கம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. என்றாலும் வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த திருப்பூர் தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment