Thursday, November 27, 2014
நாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் வரை இந்த தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.–67) செல்கிறது. மொத்தம் 520 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தென்னிலை மற்றும் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசிய நெஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பாதையான இந்த சாலையில் தற்போது அதிக அளவில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள் 2 மாத காலத்தில் முடிக்கப்பட்டு அரசின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள 10 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைய உள்ள இடத்தில் மட்டும் மேலும் 15.40 மீட்டர் அகலத்திற்கு சாலை போடப்பட உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
தற்போது ரூ.2 கோடி மதிப்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி மட்டும் நடைபெறுகிறது. பணிகள் முடிந்த பின் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் என்பது முடிவு செய்யப்படும். எந்த எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணங்கள் என்பது பின்னர்தான் தெரியவரும். எனவே தற்போதைக்கு சுங்கச்சாவடி பணியை மட்டும் முடிக்க உத்தரவு வந்துள்ளது. ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் பராமரிப்பில் உள்ள தேசிய நெஞ்சாலைகளில் மட்டும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் விரிவாக்க பணிகள் முழுமையாக முடியவில்லை. மேலும் வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், சூலூர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கூட எடுக்கப்படாமல் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment