Thursday, November 27, 2014
நாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் வரை இந்த தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.–67) செல்கிறது. மொத்தம் 520 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தென்னிலை மற்றும் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசிய நெஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பாதையான இந்த சாலையில் தற்போது அதிக அளவில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 2 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள் 2 மாத காலத்தில் முடிக்கப்பட்டு அரசின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள 10 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைய உள்ள இடத்தில் மட்டும் மேலும் 15.40 மீட்டர் அகலத்திற்கு சாலை போடப்பட உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
தற்போது ரூ.2 கோடி மதிப்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி மட்டும் நடைபெறுகிறது. பணிகள் முடிந்த பின் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் என்பது முடிவு செய்யப்படும். எந்த எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணங்கள் என்பது பின்னர்தான் தெரியவரும். எனவே தற்போதைக்கு சுங்கச்சாவடி பணியை மட்டும் முடிக்க உத்தரவு வந்துள்ளது. ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் பராமரிப்பில் உள்ள தேசிய நெஞ்சாலைகளில் மட்டும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் விரிவாக்க பணிகள் முழுமையாக முடியவில்லை. மேலும் வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், சூலூர் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கூட எடுக்கப்படாமல் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...

0 comments:
Post a Comment