Thursday, November 27, 2014
திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் பிலோமினாள்(வயது 45). இவருக்கு மதுபழக்கம் இருந்துள்ளது. இவரை கடந்த 2007–ம் ஆண்டு ஜூலை மாதம் 10–ந்தேதி காணவில்லை என்று அவரது மகள் ரூரல் போலீசில் அளித்த புகாரில் பேரில் போலீசார் பிலோமினாளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கும் ராக்கியாபாளையத்துக்கும் இடையே உள்ள துண்டுகாடு என்ற பகுதியில் உள்ள கிணற்றில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக ரூரல் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
விசாரணையில் இறந்து கிடந்த பெண் உடல் 1 மாதத்துக்கு முன்பு காணாமல் போன பிலோமினாள் உடல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு சம்மந்தமாக நல்லூர் பிரபு நகர் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயசூர்யா(வயது 34), அவருடைய நண்பர்கள் ஸ்டாலின்(38), அலெக்ஸ் என்ற அலெக்ஸ்சாண்டர்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் மற்றும் அலெக்ஸ் என்ற அலெக்சாண்டர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஜெகன் என்ற ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் பிலோமினாளை அழைத்து சென்று மது குடிக்க வைத்து கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியது உறுதியானது.
இதை தொடர்ந்து திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா குற்றவாளி ஜெகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த அபராதத்தை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் வி.பரிமளா ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment