Thursday, November 27, 2014
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு 1–வது குறுக்குதெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க கோரி மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;–
நான் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தை ரம்யா(வயது 6). கணியம்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன் அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் படியும் அறிவுறுத்தினார்கள். ஆனால் மருத்துவ செலவுக்காக போதிய வருமானம் இல்லாததால் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் அரசு சார்பில் அறுவை சிகிச்சை செய்ய போதிய நிதி அளித்து உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட உபரிநிலங்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு பிரித்து வழங்குவதாக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி காங்கயம் தாலுக்கா பழைய கோட்டை, குட்டப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். சட்டப்படி இது தடை செய்யப்பட்டதாகும். இதனால் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம், கண்காணிப்பாளர்கள் இந்த தடை சட்டத்தை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பாரத் மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆவின்பால் மற்றும் தனியார் பால்விற்பனை முகவர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்து வருகின்றனர். ஏழைகள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு பால் விற்பனையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment