Saturday, November 01, 2014
வணிக வரித் துறையின் மதுரை கோட்ட அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். வணிக வரித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன், ஆணையர் கே.ராஜாராம், கூடுதல் ஆணையர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை கோட்ட இணை ஆணையர் எஸ்.விஜயகுமார், துணை ஆணையர்கள், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
வணிக வரி துறையின் முன்னேற்ற நடவடிக்கைகள், வரி வசூலைத் தீவிரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், கணினி வழியிலான சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வணிகர்களை அறிவுறுத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டுக்கான வணிக வரி வசூல் இலக்காக ரூ.68 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இப்போது வரை ஏறத்தாழ 50 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் எஞ்சிய தொகையை வசூல் செய்து இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment