Saturday, November 01, 2014
வணிக வரித் துறையின் மதுரை கோட்ட அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவரித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்தார். வணிக வரித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன், ஆணையர் கே.ராஜாராம், கூடுதல் ஆணையர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை கோட்ட இணை ஆணையர் எஸ்.விஜயகுமார், துணை ஆணையர்கள், மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
வணிக வரி துறையின் முன்னேற்ற நடவடிக்கைகள், வரி வசூலைத் தீவிரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள், கணினி வழியிலான சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வணிகர்களை அறிவுறுத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டுக்கான வணிக வரி வசூல் இலக்காக ரூ.68 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் இப்போது வரை ஏறத்தாழ 50 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் எஞ்சிய தொகையை வசூல் செய்து இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
-
மின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
0 comments:
Post a Comment