Tuesday, November 25, 2014
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஓய்வு இடைநிலை சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் எம்.திருமலைசாமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஈங்கூர் சேதுபதி முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் சிதம்பரம் வரவேற்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில கரூர் மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தியாகராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், நாமக்கல் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, நாகை மாவட்ட தலைவர் வரதராஜ், தென்மண்டல தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் மேற்கொண்ட 3444 பேரில் இன்று வரை ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993 ஐ அமுல்படுத்தப்பட்டவர்கள் போக மீதியுள்ளவர்களுக்கு ஒரே ஆணையாகக் கல்வி செயலகம் வெளியிட வேண்டும். இன்று வரை 3444 பேரைத் தவிர்த்து புதிதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற மற்றும் இன்னும் தீர்ப்பு பெறாத அனைவருக்கும் ஓர் பொது ஆணை வெளியிட வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஜி.ஓ.எம்.எஸ். நெ.216 தேதி 22.03.1993க்கான அரசாணைகள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கும் பள்ளி கல்வித்துறையின் நிலைப்பாட்டால் தேவையற்ற குளறுபடிகள் உருவாகியுள்ளது. எனவே அனைவருக்கும் ஒரே ஆணையாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரத முடிவில் மாநில இணைச்செயலாளர் அப்பாத்துரை நன்றி கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment