Sunday, November 23, 2014
திருப்பூரில் அடிக்கடி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏழு பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு பகுதியில் உள்ள வெள்ளியங்காடு வட்டாரத்தில் நாவிதன் தோட்டம், கணேஷ்நகர், வெள்ளியங்காடு முதல் வீதி, வெள்ளியங்காடு 2வது வீதி, வெள்ளியங்காடு 3வது வீதி, முத்தையன் நகர், முத்தையன் கோயில் மெயின் ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கக் கூடிய பாலங்கள் மழைக் காலங்களில் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போதும், கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது இந்த பாலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மேற்கண்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவுகளைப் போல் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பாலங்கள் உடைந்து குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மிகப்பெரும் சேதம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்த பகுதிகளை இணைக்கும் பாலங்களை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட பாலங்களை உயர்த்திக் கட்டுவதை விட்டு விட்டு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன. எனவே பல்லாயிரம் மக்கள் வசிக்கும் மேற்கண்ட பகுதிகளில் இணைப்புப் பாலங்களை உயர்த்திக் கட்ட தமிழக அரசும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று (நவ.23) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் வெள்ளியங்காடு பகுதி கிளைகளின் செயலாளர்கள் கே.பொம்முதுரை, சந்திரசேகர், மாரிமுத்து மற்றும் தென்னம்பாளையம் கிளைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் ஏறத்தாழ நாற்பது பேர் பங்கேற்று வீடு, வீடாக மக்களைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறி கையெழுத்துப் பெற்றனர். இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.
மக்களிடம் கையெழுத்துப் பெற்ற படிவங்களை தொகுத்து அரசுக்கு அனுப்பவும், இனியும் நடவடிக்கை எடுக்காமல் அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. வெள்ளியங்காடு பகுதியில் பாலங்களை உயர்த்திக் கட்ட வலியுறுத்தி பொது மக்களிடம் ஞாயிறன்று கையெழுத்துப் பெறும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment