Thursday, November 27, 2014
மதுரை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் ராம்நாட் டி.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தனசாமி, பொதுச்செயலாளர் குமாரலிங்கம், துணை தலைவர் எம்.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர் அய்யனார் வரவேற்றார். மண்டல பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அவனியாபுரம் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவனியாபுரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.
வார்டு எண்: 55, 56, 58, 59, 60, 61, 62 ஆகிய அனைத்து வார்டுகளில் விரிவாக்க பகுதிகளில் முறையான தார் சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க வேண்டும். முறையாக ரேஷன் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் இயங்குகின்ற அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளினால் இரவில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இரண்டு மதுபான கடைகளையும் வேறு இடங்களில் மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் நாய்களை ஒழிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment