Thursday, November 27, 2014
மதுரை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் ராம்நாட் டி.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாவட்ட தலைவர் முத்தனசாமி, பொதுச்செயலாளர் குமாரலிங்கம், துணை தலைவர் எம்.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை தலைவர் அய்யனார் வரவேற்றார். மண்டல பொதுச்செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அவனியாபுரம் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவனியாபுரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.
வார்டு எண்: 55, 56, 58, 59, 60, 61, 62 ஆகிய அனைத்து வார்டுகளில் விரிவாக்க பகுதிகளில் முறையான தார் சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க வேண்டும். முறையாக ரேஷன் பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் இயங்குகின்ற அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளினால் இரவில் வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்துடன் செல்கின்றனர். எனவே இரண்டு மதுபான கடைகளையும் வேறு இடங்களில் மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளதால் நாய்களை ஒழிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
0 comments:
Post a Comment