Saturday, December 27, 2014
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக ஊத்துக்குளி அருகே பெண் உள்பட இருவரை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி சாந்தி (46), ரெட்டிபாளையம் உடையார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (55) ஆகியோர் சேர்ந்து, ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1.25 லட்சம், ஒரு லட்சம் ரூபாய், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதாந்திர ஏலச்சீட்டுகளும், வாராந்திரப் பலகாரச் சீட்டுகளும் நடத்தி வந்தனர்.
இதில், பணம் செலுத்துபவர்களுக்கு அதிக லாபம், வட்டி தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஊத்துக்குளி அருகே சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமிக்கவுண்டரின் மகன் தெய்வசிகாமணி(64) உள்பட பலரும் மொத்தம் ரூ.7.46 லட்சம் செலுத்தியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்திய அவர்கள், சீட்டுப் பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்யதாக தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தி, சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
0 comments:
Post a Comment