Saturday, December 27, 2014
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 7 லட்சம் மோசடி செய்ததாக ஊத்துக்குளி அருகே பெண் உள்பட இருவரை திருப்பூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
ஊத்துக்குளி விஜயமங்கலம் சாலையைச் சேர்ந்தவர் மனோகர் மனைவி சாந்தி (46), ரெட்டிபாளையம் உடையார் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் (55) ஆகியோர் சேர்ந்து, ரூ. 2 லட்சம், ரூ. 1.50 லட்சம், ரூ. 1.25 லட்சம், ஒரு லட்சம் ரூபாய், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதாந்திர ஏலச்சீட்டுகளும், வாராந்திரப் பலகாரச் சீட்டுகளும் நடத்தி வந்தனர்.
இதில், பணம் செலுத்துபவர்களுக்கு அதிக லாபம், வட்டி தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஊத்துக்குளி அருகே சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமிக்கவுண்டரின் மகன் தெய்வசிகாமணி(64) உள்பட பலரும் மொத்தம் ரூ.7.46 லட்சம் செலுத்தியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஏலச்சீட்டு நடத்திய அவர்கள், சீட்டுப் பணத்தை திரும்பத்தராமல் மோசடி செய்யதாக தெய்வசிகாமணி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாந்தி, சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment