Saturday, December 27, 2014
பல்லடத்தில் ஊழியர்கள் விடுமுறை காரணமாக மின் கட்டண வசூல் மையம் திறக்கப்படாததால் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
இந்த மின் பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு மின் கட்டண வசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மைய ஊழியர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை விடுமுறையில் சென்று விட்டனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்தனர். ஆனால், இந்த மையம் திறக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் சுரேஷ்பாபு கூறியதாவது: மின் கட்டண வசூல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரும் விடுமுறையில் சென்று விட்டனர். இதனால், இணையதள வழியாக மின் கட்டணம் வசூல் செய்ய முடியவில்லை. அதற்கான இனையதள பயனர் பெயர், பயனர் புகு எண்ணை அவ்ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment