Saturday, December 27, 2014
பல்லடத்தில் ஊழியர்கள் விடுமுறை காரணமாக மின் கட்டண வசூல் மையம் திறக்கப்படாததால் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பல்லடம் நகர உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
இந்த மின் பொறியாளர் அலுவலகத்தில் இரண்டு மின் கட்டண வசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மைய ஊழியர்கள் இருவரும், வெள்ளிக்கிழமை விடுமுறையில் சென்று விட்டனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை, வழக்கம்போல் மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் இந்த மையத்துக்கு வந்தனர். ஆனால், இந்த மையம் திறக்கப்படாததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர் சுரேஷ்பாபு கூறியதாவது: மின் கட்டண வசூல் மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரும் விடுமுறையில் சென்று விட்டனர். இதனால், இணையதள வழியாக மின் கட்டணம் வசூல் செய்ய முடியவில்லை. அதற்கான இனையதள பயனர் பெயர், பயனர் புகு எண்ணை அவ்ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment