Wednesday, December 31, 2014
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அக்பர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தால் சிறு, குறுந் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி வர்த்தகத்திலும் உயர்ந்துள்ள உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை பெற முடியாமல் தொழில் முனைவோர் தவித்துக் கொண்டுள்ளனர். இதேபோல், பால் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
தொடரும் இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றை திரும்பப் பெறுவதுடன், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழிற்சங்க தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சர்மிளாபாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment