Friday, December 05, 2014
மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்தது. இம்முறைகேடு பற்றி விசாரிக்கும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரை வந்த சகாயம், தனது குழுவினருடன் விசாரணையை தொடங்கினார். இவரது பாதுகாப்புக்கு 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வந்த சகாயத்திடம் மேலூர், கீழவளவு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் நேற்று புகார் மனு கொடுத்தனர். அதில் நில அபகரிப்பு, குறைந்த விலைக்கு வாங்கியது, நிலத்திற்குறிய பணம் முழுவதும் கொடுக்காதது, மிரட்டல், பாதையை மறைத்து நிலத்தை அபகரித்தது போன்ற புகார்கள் கொடுக்கப்பட்டது.
இதனால் சகாயம் விசாரணை நடத்தும் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் சகாயத்திடம் யார்? யார்? புகார் கொடுக்க வருகிறார்கள் என வேவு பார்க்க கிரானைட் அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள், புரோக்கர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். குறிப்பாக பி.ஆர்.பி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் சில ஊழியர்கள் வேவு பார்த்து வருவதாக விசாரணை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வந்தவர்கள் தெரிவித்தனர். இப்படி ஒரு கும்பல் நோட்டமிடுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
இதை தொடர்ந்து மதுரை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் சகாயம் போனில் பேசினார். ஏற்கனவே பாதுகாப்புக்கு 2 துப்பாக்கி போலீசார் நியமிக்கப்பட்ட நிலையில் 3 சப்–இன்ஸ்பெக்டர்கள், 5 போலீசார் கூடுதலாக போடப்பட்டு உள்ளனர். வேவு பார்க்கும் நபர்களை ரகசியமாக கண்காணித்து அவர்களை பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் விசாரணை அலுவலகத்தை சுற்றியும் மப்டி போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment