Friday, December 05, 2014
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்
முத்துராஜா(22). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தார்.
வியாழக்கிழமை மாலை முத்துராஜாவும், அவரது நண்பர் அஜீத்தும் அருகில் உள்ள
தண்ணீர் தொட்டிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர்
கொண்ட கும்பல், முத்துராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த
முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச்சென்ற
அஜீத், இதுகுறித்து முத்துராஜாவின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள், கொலையாளிகளை கைது
செய்யக்கோரி, முத்துராஜாவின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தகவல் அறிந்த, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஸ், மானாமதுரை உதவி கண்காணிப்பாளர் புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சித்திரைச்செல்வம், பிரசாத், பாலு உள்ளிட்ட கும்பலைத் தேடி வருகின்றனர். போலீஸாரால் தேடப்படும் மூவரும், கடந்த 2011ஆம் ஆண்டு தேவர் ஜயந்திக்கு சென்று திரும்பியவர்கள் மீது விரகனூர் சுற்றுச்சாலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment