Wednesday, January 28, 2015
இந்நிலையில் தொட்டியபட்டியில் கோமதியின் பெரியப்பா பொன்னையாவின் பேரன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கோமதி தனது தந்தை சின்னச்சாமி, தாய் ராமுத்தாய், சகோதரிகள் பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த கமலக்கண்ணனுக்கும், கோமதிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் அவரது சகோதரர் பரமசுந்தரம் ஆகியோர் கோமதி, சின்னச்சாமி, ராமுத்தாய் உள்பட 5 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கொடூரமாக கொன்ற கமலக்கண்ணன், பரமசுந்தரம் மற்றும் உடந்தையாக இருந்த இவர்களின் தாயார் சுப்புலட்சுமி ஆகிய 3 பேரை கைது செய்து உசிலம்பட்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். நீதிபதி கிறிஸ்டின்பபிதா, கொலையாளிகள் 3 பேரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி கமலக்கண்ணன், பரமசுந்தர் ஆகியோர் மதுரை சிறையிலும், சுப்புலெட்சுமி திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்து சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, மருமகன் முத்து (கொலை செய்யப்பட்ட பாக்கியலட்சுமியின் கணவர்) ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் உடல்கள் மங்கல்ரேவு சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் திடீரென பிணங்களை எரிக்க விடாமல் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறாகள். ஆனால் இதுவரை யாரும் ஆறுதல் கூட தெரிவிக்கவரவில்லை என்று ஆவேசத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த போலீஸ் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக இருந்த கே.ராஜபாண்டியன் கடந்த 2013–ம் ஆண்டு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அ....
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
0 comments:
Post a Comment