Monday, January 19, 2015
வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரி, குப்பை, புதர்களை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் மத்தியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரவும், குப்பையையும், புதர்களையும் உடனடியாக அப்புறபடுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன், ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) லதா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் என்.ரகுபதி, மாநகர் நல அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment