Monday, January 19, 2015
அதிபர் மிச்செல் மார்ட்டெலி பதவிவிலகக் கோரி தலைநகர் போர்டா பிரின்சில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.
கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயன்றுவருகினறனர்.
எல்லோரும் ஏற்கக்கூடிய ஒரு அரசை அடுத்த 48 மணி நேரத்தில் அமைக்க எதிர்க்கட்சிகளுடன் பேசி, ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருப்பதாகவும் அதனால் அமைதி காக்கும்படியும் மார்ட்டெலி கோரிக்கைவிடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதனால், தற்போது ஹைதியில் இயங்கக்கூடிய அரசு ஏதும் இல்லை.
நாட்டின் அதிபராகத் தொடர்ந்து செயல்படுவதற்காக மார்டெலி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகான நாடாளுமன்றத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருப்பதாக இரு வாரங்களுக்கு முன்பாக மார்டெலி அறிவித்தார். ஆனால் இழுபறி நீடித்தபடியே இருந்துவருகிறது.
நாடாளுமன்றம் கலைப்பு
இந்த அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாக, திங்கட்கிழமையன்று மார்டெலி அறிவித்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே எதிர்க்கட்சிகளுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், ஹைதியில் அரசுக்கு எதிராகப் பல மாதங்களாகப் போராட்டம் நடந்துவருகிறது.
ஹைதியின் பிரதமராகஇருந்த லாரென்ட் லமோத் டிசம்பர் 14ஆம் தேதியன்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக, பத்திரிகையாளராக இருந்த இவான் பால் பதவியேற்றார். இருந்தபோதும் மார்டெலி பதவிவிலக வேண்டுமெனக் கோரி, போராட்டங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
அந்நாட்டின் மேலவைக்கு நடக்க வேண்டிய தேர்தல்கள் 2012ஆம் ஆண்டு மே மாதமே நடந்திருக்க வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்.
அக்டோபர் 26ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசுக்கும் மேலவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒரு பகுதியினருக்கும் இடையில் தேர்தல் சட்டம் குறித்து உடன்பாடு எட்டப்படாததால், தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டன.
2010ஆம் ஆண்டில் ஹைதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் நினைவு தினம் திங்கட்கிழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment