Monday, January 19, 2015
கிழக்கு சீனாவில் ஓடும் யாங்சே நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜியாங்ஸு மாகாணத்தில் ஜாங்ஜியாகாங் என்ற பகுதிக்கு அருகில் சில பரிசோதனைகளை இந்தப் படகு மேற்கொண்டிருந்தபோது, வியாழக்கிழமையன்று இந்த விபத்து நேரிட்டது. அப்போது இந்தப் படகில் 25 பேர் இருந்தனர்.
விபத்து நேரிட்டபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு பேர், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த இருவர், ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேரும் படகில் இருந்தனர்.
படகில் இருந்தவர்களில் மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் 22 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
30 மீட்டர் நீளம் கொண்ட, வாங்ஷென்ஷு 67 என்ற இந்தப் படகு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. விபத்து நிகழ்ந்தபோது, படகில் அதன் உரிமையாளரும் சில பொறியாளர்களும் இருந்தனர்.
வெள்ளிக்கிழமையன்று மீட்கப்பட்ட வாங் ஷென்ஹுவா என்பவர், பிரதான எஞ்சினை சோதனை செய்து கொண்டிருந்தபோது, படகு திடீரென தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, 20 வினாடிகளில் ஓட்டுனர் அறை முழுவதும் நீரால் நிரம்பிவிட்டதாக அவர் கூறினார். அங்கிருந்த ஹைட்ராலிக் பம்பை பிடித்துக்கொண்டு தான் உயிர் தப்பியதாகவும் இவர் கூறினார்.
ஜப்பானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரையும் தான் பிடித்துக்கொள்ள முயன்றதாகவும், ஆனால், படகு மேலும் மேலும் மூழ்கவே அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் வாங் கூறினார்.
இந்தப் படகு கடந்த அக்டோபரில் சீனாவில் கட்டப்பட்டது. இந்தப் படகு எங்கே செல்லவிருக்கிறது, என்ன செய்யப்போகிறது என்ற விவரங்களை துறைமுக அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவில்லையென உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment