Monday, January 19, 2015
முத்தூரில் செல்லிடைபேசிக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்து ரூ.65,000 ரொக்கத்தை திருடிச்சென்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் சுவற்றைத் துளையிட்டு திருடிய சம்பவம், காங்கயம் வட்டாரத்தில் இது தான் முதல் முறையென போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அருகே ஊஞ்சக்காட்டுவலசைச் சேர்ந்தவர் கே.சசிக்குமார் (31). இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் கல்லன் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர், முத்தூர் பேருந்து நிலையம் அருகில் எம்.வி.பி. வணிக வளாகத்தில் செல்லிடைபேசிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை இரவு அவர் கடையைப் பூட்டிச்சென்றார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சசிக்குமார் கடையைத் திறந்தபோது, பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், கடையின் பின்புறச் சுவற்றில் பெரியளவில் ஓட்டை போடப்பட்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தார். மேஜையில் இருந்த ரூ.65,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. செல்லிடைபேசிகள் திருடுபோகவில்லை.
கடையையொட்டியுள்ள, செல்லிடைபேசி பழுது சரிசெய்யும் அறையின் மேற்கூரை வழியாக மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, கடப்பாறையால் சுவற்றில் துளைபோட்டு தப்பிச்சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment