Monday, January 19, 2015
முத்தூரில் செல்லிடைபேசிக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்து ரூ.65,000 ரொக்கத்தை திருடிச்சென்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் சுவற்றைத் துளையிட்டு திருடிய சம்பவம், காங்கயம் வட்டாரத்தில் இது தான் முதல் முறையென போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அருகே ஊஞ்சக்காட்டுவலசைச் சேர்ந்தவர் கே.சசிக்குமார் (31). இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் கல்லன் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர், முத்தூர் பேருந்து நிலையம் அருகில் எம்.வி.பி. வணிக வளாகத்தில் செல்லிடைபேசிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை இரவு அவர் கடையைப் பூட்டிச்சென்றார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சசிக்குமார் கடையைத் திறந்தபோது, பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், கடையின் பின்புறச் சுவற்றில் பெரியளவில் ஓட்டை போடப்பட்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தார். மேஜையில் இருந்த ரூ.65,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. செல்லிடைபேசிகள் திருடுபோகவில்லை.
கடையையொட்டியுள்ள, செல்லிடைபேசி பழுது சரிசெய்யும் அறையின் மேற்கூரை வழியாக மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, கடப்பாறையால் சுவற்றில் துளைபோட்டு தப்பிச்சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
திருச்சி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம். திருச்சி...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment