Wednesday, January 07, 2015
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது .இதனை மறு ஆய்வு செய்திட கோரி தமிழக அரசின் சார்பிலும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவே இதற்கு அவசர சட்டம் இயற்றி தமிழக அரசு அனுமதி வழங்கிடவும் ,வன விலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கவும் ,தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் பி ராஜசேகரன் தலைமை வகித்தார் .மதுரை ,சிவகங்கை ,ராமநாதபுரம் ,திண்டுக்கல் ,தேனி,திருச்சி ,தஞ்சை ,சேலம் ,கோவை ,விருதுநகர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர் .ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் பி ராஜசேகரன் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு ஜல்லிக்கட்டை நடத்திட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இந்த தடை நிரந்தரமானதும் அல்ல நிலையானதும் அல்ல என பேசினார் .பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆறுமுக நயினாரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர் .மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடமும் கோரிக்கையை வலியுறுத்தினர் .உடன் அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் ,சமத்துவ மக்கள் கட்சி கரு .நாகராஜன் ,ஈஸ்வரன் .ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பள்ளி மாணவர் கராத்தே போட்டி யில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம். உதவித் தலைமை ஆசிரியர் திரு .GP அவர்களால் பரிசு வழங்கப்பட்ட து. ...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
திருப்பூரில் அனுமதியின்றி மதுவிற்ற பார் ஊழியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– மிலாடி ...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
0 comments:
Post a Comment