Thursday, January 08, 2015
ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்யப்பட்டு தை மாதம் அறுவடை செய்யப்படும் புகையிலை பயிர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கயம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தண்ணீர் பிரச்சினை, பராமரிப்பு, விலையின்மை போன்ற காரணங்களால் புகையிலை பயிரிடுவதை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டு மாற்றுப் பயிர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலும் காங்கயம் அடுத்துள்ள புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம், மரவபாளையம், சித்தம்பாளையம், பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் புகையிலை சாகுபடி செய்துள்ளனர்.
இதுபற்றி புகையிலை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:–
ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை நடப்படும் புகையிலை 110 நாள் பயிராகும். உழவு, களையெடுத்தல், சிம்பு எனப்படும் கிளைகள் ஒடித்தல், உரச்செலவுகள் என ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். செடியின் விலை சுமாராக ரூ.8–க்கு விற்றாலும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்றனர்.
இங்கு விளையும் புகையிலை கொடுவாயைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், செங்கனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதிகமாக புகையிலை விளைந்த காலங்களில் உள்ளூரிலேயே அவற்றை பதப்படுத்தி வந்தனர். இதற்காக கொடுவாய், வெள்ளியம்பாளையம், குண்டடம் பகுதிகளில் ஏராளமான புகையிலை குடோன்கள் இருந்தன. தற்போது புகையிலை சாகுபடி குறைந்த காரணத்தினால் அவைகள் கல்யாண மண்டபங்களாகவும், மாட்டுத் தொழுவங்களாகவும் மாறிவிட்டன.
இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையிலும் காங்கயம் அடுத்துள்ள புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம், மரவபாளையம், சித்தம்பாளையம், பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் புகையிலை சாகுபடி செய்துள்ளனர்.
இதுபற்றி புகையிலை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:–
ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை நடப்படும் புகையிலை 110 நாள் பயிராகும். உழவு, களையெடுத்தல், சிம்பு எனப்படும் கிளைகள் ஒடித்தல், உரச்செலவுகள் என ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். செடியின் விலை சுமாராக ரூ.8–க்கு விற்றாலும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்றனர்.
இங்கு விளையும் புகையிலை கொடுவாயைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், செங்கனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதிகமாக புகையிலை விளைந்த காலங்களில் உள்ளூரிலேயே அவற்றை பதப்படுத்தி வந்தனர். இதற்காக கொடுவாய், வெள்ளியம்பாளையம், குண்டடம் பகுதிகளில் ஏராளமான புகையிலை குடோன்கள் இருந்தன. தற்போது புகையிலை சாகுபடி குறைந்த காரணத்தினால் அவைகள் கல்யாண மண்டபங்களாகவும், மாட்டுத் தொழுவங்களாகவும் மாறிவிட்டன.
இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
சென்னை ஏழுகிணறு சுந்தரம் முதல் தெரு பகுதியில் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கையில் கோணிப்பையுடன் சந்தேகப்பட...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
0 comments:
Post a Comment