Saturday, February 28, 2015
மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ளது கார்சேரி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கருப்பசாமி (வயது 62) அ.தி.மு.க.வை சேர்ந்த கருப்பசாமி அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்சினை எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26–ந்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடு அகற்றப்பட்டது.
வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அந்த தரப்பினர் முடிவு செய்தனர். நேற்று கருப்பசாமியின் வீடு அருகே 6 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்து கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுரையில் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிண...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
0 comments:
Post a Comment