Thursday, February 05, 2015
மதுரை அருகே வாடிப்பட்டி பக்கமுள்ள பொம்மபட்டியை சேர்ந்தவர் தினகரன்.
இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு
ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த மறுநாளே அந்த குழந்தை
கடத்தப்பட்டது.
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
இக்குழந்தையை மீட்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கண்டுபிடிக்க முடியாததால் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருப்பூரில் ஒரு இடத்தில் வளர்வதாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்று ஒரு ஆண் குழந்தையை மீட்டது.
பின்னர் அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளர்த்த பெண், குழந்தையை பறிகொடுத்த தினகரன், மீனாட்சி தம்பதியினர் ஆகியோரை போலீசார் அழைத்து சென்றனர்.
அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆலோசனைபடி சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் நடராஜன் முன்னிலையில் மீட்கப்பட்ட குழந்தை, தினகரன், மீனாட்சி ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
பின்னர் அந்த ரத்தம் சீலிடப்பட்ட உறையில் வைத்து தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment