Sunday, February 08, 2015
தமிழகத்தில் பெண்சிசு கொலையை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
திருமங்கத்தில் விழிப்புனர்வு ஊர்வலம் நடைபெற்றது. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஊர்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிவழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள், தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் உட்பட 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை நகரசபை தலைவர் உமாவிஜயன் தொடங்கி வைத்தார். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சியாமளாதேவி தலைமை தாங்கினார். டாக்டர்கள் ராஜகுமாரி சோமசேகர், மாங்கனி ஆகியோர் வரவேற்றனர். மதுரை மாவட்ட மருத்துவ நலப்பணிகளை தொழுநோய் பிரிவு இணை இயக்குநர் ராஜமோகன், பெண் சிசுகொலை தடுப்பு குறித்து பேசினார். தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஜோசப் வின்சென்ட், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை அதிகாரி டாக்டர் பூமிநாதன் நன்றி கூறினார்.
இணைஇயக்குநர் டாக்டர் ராஜமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகள், 980 பெண் குழந்தைகள் என்ற விகிதாசாரத்தில் பிறக்கின்றன. மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் கொலை குறைந்து, ஆயிரத்திற்கு 990 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறக்கின்றது.
கேரளாவில் பெண் குழந்தைகள் பிறப்பு அதிகரித்து உள்ளது. அரியானாவில் குறைவாக உள்ளது. மேலும் தொழுநோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை 100 குழுக்களாக பிரித்து ஒரேநாளில், ஒரே நேரத்தில் வீடுகளுக்கு சென்று தொழுநோய் குறித்தும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டியதின் அவசியத்தையும், சிகிச்சை குறித்தும் எடுத்துரைத்தனர்.
திருமங்கலத்திலும், செங்கப்படையிலும் நேரடியாக 25 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழுநோயளிகள் 150 பேர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர் என்று கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை தொழுநோய் பிரிவு மேற்பார்வையாளர்கள் சிவநேசன், பாலகிருட்டினன், முருகேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment