Sunday, February 08, 2015
டோக் பெருமாட்டி கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இளநிலை, முதுநிலை மற்றும் எம்.ஃபில் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
கல்லூரி காலங்கள் முடிந்ததும் அடுத்து என்ன செய்வது, எந்த நிறுவனத்தில் பணியில் சேருவது போன்ற பல கேள்விகள் உங்கள் முன் இருக்கலாம். அதனால், எந்த ஒரு அவசரமும் இல்லாமல் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை தெளிவாகத் தேர்ந்தெடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்து வாழவேண்டும். தவறு செய்துவிட்டோம் என பின்னாள்களில் வருந்த வேண்டாம். வாழ்க்கை என்றும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் நீங்கள் தீர்மானித்த பாதையில் உங்கள் வாழ்க்கை பயணிக்கும்.
செய்யும் வேலையை திருப்தியுடனும், முழு ஈடுபாடுடனும் செய்யுங்கள். அதுவே, உங்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அதேபோல், வாழ்க்கையின் எல்லா தருணங்களும் உங்களுக்கு ஏற்றதாகவே அமையாது. அனைத்து சூழலிலும் வாழ பழகுங்குள். உங்கள் ஆளுமைத் திறனையும், வாழ்வின் உணர்ச்சிகளையும் ஒன்றாக குழப்ப வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட கடவுளின் மேல் நம்பிக்கையாய் இருங்கள். அது உங்களை என்றுமே நல்வழிப்படுத்தும் என்றார்.
விழாவில், இளநிலை மாணவிகள் 691 பேரும், முதுநிலை மாணவிகள் 167 பேரும், ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் 78 பேரும் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பி.டபிள்யு.சி. டேவிதார் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், கல்லூரி முதல்வர் மெர்சி புஷ்பலதா மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...
0 comments:
Post a Comment