Sunday, February 08, 2015
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது.
ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: சாதிக்கும் சிந்தனை வேண்டும். அறிவுப் பசி அனைவருக்கும் அவசியம். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. குறிக்கோள், லட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைய 10 ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும். சாகும்வரை படித்து கொண்டு இருக்க வேண்டும். வெற்றியின் ரகசியம் வாசிப்பது தான். பாட புத்தகங்கள் தவிர தினம் 100 பக்கம் மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவருக்குள் ஏராளமான திறமைகள் உள்ளன. அதை வெளிக் கொண்டு வர வேண்டும். வாழ்வில் வெற்றி, தோல்வி வரும். தோல்விகள் அதிகம் வரும். அதற்காக மனம் தளரக்கூடாது. அது அனுபவங்களை கொடுப்பதுடன், திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவும் என்றார்.தியாகராஜர் கல்லுாரி செயலாளர் உமா கண்ணன், தியாகராஜர் மில் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன், முதல்வர் அபய்குமார், டீன் வாசுதேவன், பதிவாளர் பழனிநாதராஜா மற்றும் பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...

0 comments:
Post a Comment