Monday, March 09, 2015
மடத்துக்குளம்,
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி மடத்துக்குளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்வி நிறுவன வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன்றிய கழக செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மராத்தான் ஓட்டப்பந்தயம் 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 5 கிலோ மீட்டர் பிரிவில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர்.
ஜே.எஸ்.ஆர்.பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டப்பந்தயம் வேடப்பட்டி, கழுகரை, நால்ரோடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் செந்தில்குமார் முதல் பரிசும், அருள்பிரகாஷ் 2–வது பரிசும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் அனுப்பிரியா முதல் பரிசும், கிருத்திகா 2–வது பரிசும் பெற்றனர். 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ரவிக்குமார் முதல் பரிசும் சல்மான் 2–வது பரிசும், பெண்கள் பிரிவில் திவ்யா முதல் பரிசும், முருகேஸ்வரி 2–வது பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., சி.மகேந்திரன் எம்.பி. ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். ஜே.எஸ்.ஆர்.பள்ளித்தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ராஜ்குமார், ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன், அறக்கட்டளை உறுப்பினர் சதீஷ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் தண்டபாணி, மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் காளீஸ்வரன், கணியூர் காஜாமைதீன், காரத்தொழுவு ரவி, அசோக், பாபு, ஜே.எஸ்.ஆர்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சரவணக்குமார், மாண்டிசேரி பள்ளி முதல்வர் சிவபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment