Saturday, March 07, 2015
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாநகராட்சிக்கு தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 கோடியே 58 லட்சத்துக்கு 60 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுபோல் இயக்குதலும் பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கட்ட ரூ.7 கோடி மானியம் ஒதுக்கப்பட்டதில் ரூ.7 கோடியே 31 லட்சம் மதிப்பில் 24 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்ட ரூ.9 கோடி மானியம் வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 69 லட்சம் மதிப்பில் 10 இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்பில் குமார்நகர்– அவினாசி ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– புஷ்பாதியேட்டர் சந்திப்பு, ராக்கியாபாளையம் பிரிவு– காங்கயம் ரோடு சந்திப்பு, மாநகராட்சி அலுவலக சாலை– மங்கலம் ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு– காங்கயம் ரோடு சந்திப்பு, ரெயில்நிலையம்– டவுன்ஹால் சந்திப்பு ஆகிய 6 இடங்களில் உயர்மட்ட நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி மொத்தம் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமிபூஜைகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிகளில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் முருகசாமி, கீதா ஆறுமுகம், பி.கே.முத்து, விஜயகுமார், சண்முகசுந்தரம், கேபிள்சிவா, ஆனந்தன், மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், திருமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment