Tuesday, March 17, 2015
மதுரையில் லேசான மழை பெய்ததில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக மாறியுள்ளன.
சனிக்கிழமை இரவு திடீரென மழை பெய்ததில் மதுரையில் பல
இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. தண்ணீர் வெளியேற வழி இல்லாத
சாலைகளில் வாகனங்கள் சென்றதால் மேலும் அரிக்கப்பட்டு பள்ளமாக மாறின.
மேலும் கொசுகள் உற்பத்தியாகும் இடமாகவும் அந்த இடங்கள் மாறியுள்ளன.
மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜெய்ஹிந்துபுரம், பெரியார்
பேருந்துநிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும்
மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ள
மணிநகரம் பகுதியில் சாலைகள் போர்களம் போல் சிதிலமாகி காணப்படுகின்றன.
மதுரை பிரதான
சாலைகளில் தண்ணீர் தேங்கி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேறும்
சகதியுமான சாலைகளால் பள்ளிக் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர். கொசுக்கள்
உற்பத்தியாவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர். மதுரையைப் பொறுத்தவரை மழைநீர் வடிந்து செல்வதற்கான பாதைகளை
சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எதிர்பார்க்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment