Monday, March 09, 2015
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ. 59.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊத்துக்குளி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2 குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பைகளை தரம் பிரிக்க பயன்படுத்தப்படும் கூடைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் வாங் கப்பட்டுள்ள கருவிகள், ரூ. 25.60 லட்சம் மதிப்பில் உலர் கலத்துடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
குப்பையள்ளும் வாகனங்கள் சிறந்த வசதியுடன் வாங்கப்பட்டுள்ளது என பாராட்டினார். கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
தொடர்ந்து ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.6.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பய ணிகள் நிழற்குடை ஆகிய வைகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கலைவாணன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது இ–சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இம்மையத்தினை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் தேசிய நில அளவை ஆவணங்கள் வைப்பு அறையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் பெயர் திருத்தம், சேர்த்தல் முகவரி மாற்றம் குறித்து பதிவுகள் மேற்கொள்ளும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவினையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment