Tuesday, March 24, 2015
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் பின்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளைக் கொட்டி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் புகை உருவாகி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர், இத் தீயை அணைத்து, குப்பைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால், நல்லாறு மாசுபடுவதுடன் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அத்திக்கடவு போராட்டக் குழுவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியது: தினசரி பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. தினசரி 14 முதல் 16 டன் வரை குப்பை சேருகிறது. இதை 80 தள்ளுவண்டிகள் மூலம் வாங்குவதற்காக 25 துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து போடுவதற்காக 11 ஆயிரம் குப்பைக் கூடைகளும், சாக்குப் பைகளும் வழங்கப்படவுள்ளன.
இதைப் பயன்படுத்தி மக்கள் பேரூராட்சிக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதே போல பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை புதிய பேருந்து நிலையம் பின்புறம் கொட்டுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றாக அரசு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் குப்பைகளைச் சேகரித்து தரம் பிரித்து உரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment