Tuesday, March 24, 2015
திருப்பூரில் ஆதார் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்து வருவதாக பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது: விடுபட்டவர்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாநகராட்சி, மண்டல அலுவலகங்களிலும் நடந்து வருகிறது. ஏற்கெனவே விண்ணப்பித்து புகைப்படம் எடுத்தவர்களுக்கு ஆதார் அட்டை கிடைக்காமலும், புகைப்படம் எடுத்த நகலை கொண்டு சென்று காண்பித்தால் தள்ளுபடி ஆகிவிட்டதாகக் கூறி மீண்டும் விண்ணப்பிக்கவும் கூறுகின்றனர். மேலும், இரு முறைக்கு மேல் எடுத்தவர்களுக்கும் அதே பிரச்னை என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால், தொழில்நுட்பப் பிரச்னை என்கின்றனர்.
இதனால் வயதானவர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, நன்கு ஆய்வு செய்து இனிமேல் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க புதிதாக கணினி மற்றும் ரேகை பதிவு செய்யும் உபகரணங்களையும் வழங்கி, அந்தந்த வார்டுகளுக்கு சென்று, பொதுமக்களுக்கு ஒரே முறையில் ஆதார் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், பல பகுதிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...

0 comments:
Post a Comment