Tuesday, March 24, 2015
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்லடம் வட்டம் வெங்கிட்டாபுரம் கிராம மக்கள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
பல்லடம் நகர மக்களுக்காக வெங்கிட்டாபுரம் குடியிருப்புப் பகுதியில் மின் மயானம் அமைப்பதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் சுமார் 1,500க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தப் பகுதியில் மின்மயானம் அமைப்பதால், அப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இப் பகுதியிலுள்ள நீர்நிலைகளும் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.
பல்லடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் இந்த மின்மயானம் அமைய இருப்பதால், பல்லடம் பகுதி மக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படக் கூடும். எனவே, வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு வேறு இடத்தில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
0 comments:
Post a Comment