Tuesday, March 24, 2015
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி தேசிய செயலர் என்.நஞ்சப்பன் பேசியது: மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக அதிகப்படியான அளவுக்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. அவற்றுக்கு கைமாறாக மத்திய பாஜக அரசு இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளே ஆன, இந்தச் சட்டத்தால் கிடைத்துள்ள பலன்களை ஆராயாமல் அந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தரக் கூடாது. தமிழக அரசு கொடுத்துள்ள ஆதரவையும் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இது தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் கோபி, சித்திக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...
0 comments:
Post a Comment