Tuesday, March 24, 2015
திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ஐஎன்டியூசி தேசிய செயலர் என்.நஞ்சப்பன் பேசியது: மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜக அதிகப்படியான அளவுக்கு பெருநிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. அவற்றுக்கு கைமாறாக மத்திய பாஜக அரசு இந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு ஒன்றரை ஆண்டுகளே ஆன, இந்தச் சட்டத்தால் கிடைத்துள்ள பலன்களை ஆராயாமல் அந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமான திருத்தங்களைச் செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தி பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தரக் கூடாது. தமிழக அரசு கொடுத்துள்ள ஆதரவையும் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி பேசியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. இது தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமானது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் கோபி, சித்திக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
0 comments:
Post a Comment