Tuesday, March 24, 2015
தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், அரசின் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக, எரிவாயு உருளை விநியோகிப்புத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,500 வழங்க தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காஸ் ஏஜென்சிகளில் இந்தத் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அம் மனுவில், அவிநாசி பகுதியில் இயங்கும் 2 காஸ் ஏஜென்சிகள், கடந்த 17ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு பணி வழங்காததால், அந்தக் காஸ் ஏஜென்சி குடோன் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், தொழிலாளர் நல அலுவலர் முன்னிலையில் 3 முறை நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
வரும் 25ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாவிட்டால், தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஆட்சியரிடம் அணுகி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகள் போன்ற அரசின் ஆவணங்களை ஒப்படைக்கப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment