Tuesday, March 24, 2015
பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 19ஆவது வார்டு, நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன், தோட்டத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இந் நிலையில், அப் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
எனினும், குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வந்ததை அடுத்து ஆத்திரமடைந்த அப் பகுதி மக்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டக் கூடாது என்று வலியுறுத்தி, மாநகராட்சி செயற்பொறியாளர் ரவியிடம் மனு அளித்தனர்.
மனு விவரம்: பூலுவப்பட்டி, ஐஸ்வர்யா நகர் பாறைக்குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டியதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. தற்போது நீர்நிரம்பிய நிலையில் உள்ள நெருப்பெரிச்சல் பகுதி பாறைக் குழியில், மாநகர்ப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவு கொட்டப்படுகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
உடனடியாக நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகளைக் கொட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக மேயர், ஆணையரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...
0 comments:
Post a Comment