Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், மிஷின் வீதி, வளம் பாலம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அய்யாசாமியின் மகன் சுரேஷ் (28). பனியன் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை, வெங்கமேட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சைக்கிளில் சென்றார்.
வெங்கமேடு நல்லாத்துபாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி சுரேஷை மிரட்டி சைக்கிளைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸாரிடம் சுரேஷ் புகார் அளித்தார்.
இதையடுத்து, பூலுவப்பட்டி சோதனைச் சாவடி அருகே அனுப்பர்பாளையம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் குப்பாயம்மன் காடு பகுதியைச் சேர்ந்த பாப்புசாமி மகன் ராஜேஷ்(22) என்பதும், சுரேஷை மிரட்டி சைக்கிளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment