Tuesday, April 14, 2015
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் ஆற்றிய சிறப்புரை:
திருவள்ளுவர், பாரதியார் போன்ற பல காலத்தை வென்ற
பெருமைமிகு கவிஞர்களை இந்த உலகுக்கு தமிழ் மொழிதான் அளித்துள்ளது.
பத்திரிகைகளில் வரும் தலையங்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை தமிழின்
பல தளங்களை எடுத்துரைக்கும் சாதனங்களாகவே கருதவேண்டும்.
இதில், தலையங்கம் எழுதுவது என்பது ஒரு தனிக் கலை.
அதற்கென்று ஒரு தனித்த சிந்தனைப் பார்வை வேண்டும். தலையங்கத்தில்
விவாதப்பூர்வமான பல விஷயங்களை குறிப்பிட்டு, இறுதியில் தமக்கான ஒரு
நிலைப்பாட்டை குறிப்பிடவேண்டும். நமது நிலைப்பாட்டை வாசகர்கள்
ஒப்புக்கொள்ளுமாறு எழுதுவதே, தலையங்கத்தின் தனிச்சிறப்பு.
பத்திரிகை தலையங்கம் மிக எச்சரிக்கையாகவும்,
பக்குவத்துடனும் எழுதப்பட வேண்டும். பத்திரகையின் முகத்தைக் காட்டக்கூடிய
கண்ணாடியாக இருப்பது தலையங்கம்தான். எனவே, எதிர்காலத்திலாவது நாளிதழ்களில்
இலக்கியத்தை மையப்படுத்தி தலையங்கங்கள் எழுதப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்,
சுவாமி சதாசிவானந்தா, உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலர் ந.
மணிமொழியனார், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராஜன், பேராசிரியர்
மு. அருணகிரி, எழுத்தாளர் புதுகை மு. தருமராஜன், சாகித்ய அகாதெமி பொறுப்பு
அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
காங்கயம் அருகே, எதுவும் எழுதப்படாத நிலையில் மைல் கல் காட்சி அளிக்கிறது. காங்கயம்-தாராபுரம் நெடுஞ்சாலையில், வட்டமலை கிராமத்துக்கு முன்பாக...
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
-
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
மின் கட்டணத்தை நுகர்வோர் முன் பணமாக செலுத்தினால் 6 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று, தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக மின் ...
-
திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 38). சம்பவத்தன்று வேலைக்கு செல்ல ரோட்டை கடப்பதற்காக ரோட்டோரம் நின்றுகொண்டி...
0 comments:
Post a Comment