Tuesday, April 21, 2015
திருப்பூர் தெற்கு மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரம் உள்ளிட்டோர் மாநகராட்சியைக் கண்டித்துப் பேசினர்.
இதில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மர்மக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காக 6 நாள்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை, 3 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலன வார்டுகளில் 6 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒருநாள் விட்டு அடுத்த நாள் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர்த் திட்ட குழாய்களை விரிவுபடுத்தி கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரை அனைத்துப் பகுதியிலும் முறையாக விநியோகிக்க வேண்டும். புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகயை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைக் கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு, உடனுக்குடன் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கள்ளம்பாளையம் உள்ளிட்ட தெற்கு மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment