Wednesday, April 15, 2015
உடுமலை, : உடுமலை நகராட்சி அலுவலகம் அருகே பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தைமூடாமல் போட்டுள்ளனர். இதனால் கோயிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடுமலையில் பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்காக 33 வார்டுகளிலும் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் வீதிகள் தோறும் குண்டும்,குழியுமாக கிடக்கின்றன. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே மேம்பாலத்தின் வலதுபுறத்தில் 10 அடி நீளத்துக்கு ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment