Monday, April 20, 2015
சேவூர் அருகே ஆலத்தூர் ஆத்திக்காட்டுப்பாளையத்தில், தனியார் நூற்பாலையை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த நூற்பாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 2012 பிப்ரவரி முதல் எவ்விதக் காரணமும் இன்றி நூற்பாலை மூடப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்களுக்கும், நூற்பாலை நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மூடிக்கிடக்கும் நூற்பாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலையில் வாகனங்கள் வந்துள்ளன. இதையறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து வாகனங்களை வெளியே செல்லவிடாமல் கற்களைப் போட்டுத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வழக்கு முடியும் வரை இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, வாகனங்களில் ஏற்றப்பட்ட இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment