Monday, April 20, 2015
வாகன விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை தாராபுரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் சனிக்கிழமை ஜப்தி செய்தனர்.
தாராபுரம் அருகே சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரதேஷ் (26). தாராபுரம், பூளவாடி சாலையிலுள்ள ஹாலோபிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 22.3.2013 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சந்திராபுரத்தை நோக்கி சென்று கொண்டிருபோது, மதுரையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபெருமாள், தனது தீர்ப்பில், ரதேஷ் குடும்பத்துக்கு ரூ. 8 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 11.3.2014 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில், நஷ்ட ஈடு தொகை வழங்கப்படாததால் ரதேஷின் மனைவி கமலா நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரவணபெருமாள், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் கோவையிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை சனிக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment