Monday, April 20, 2015
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ. 2.69 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 23 ஊராட்சிகள் உள்ளன. பெதப்பம்பட்டியில் அமைந்துள்ள இந்த ஒன்றிய அலுவலகத்துக்கு புதிதாக கட்டடம் கட்டித் தரவேண்டும் என நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
கோரிக்கையை ஏற்று, தற்போது புதிய கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 2.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குநர் ரூபன் சங்கராஜ் தலைமை வகித்தார். சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுச்சாமி, ஒன்றிய ஆணையர் செல்வராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment