Friday, April 17, 2015
உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குடிமங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கொங்கல் நகரம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர், நகைக் கடன்கள் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணாக கணக்குகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இங்கு அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் வேறு கூட்டுறவுச் சங்கத்தில் மறு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயராகவன், நிர்வாகிகள் வடுகநாதன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment