Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு பூங்கா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தொழிலதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி சார்பில் மேற்கு புறம் 3 ஏக்கரில் நம்பி ஆரூரர் ஆடவர் விளையாட்டுத் திடல், 4 ஏக்கரில் திருஞானசம்பந்தர் சிறுவர், மகளிர் அரங்கம், பூஞ்செடிகள், 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த வளையத்துக்கு வெளியே பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்த 2 ஏக்கரில் மாணிக்கவாசகர் மண்டபம், 4 ஏக்கரில் திருநாவுக்கரசர் பசு மடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை தொழில் அதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி திறந்து வைத்தனர். உமாசங்கர் தாயார் சந்திராஞானவேல் குத்துவிளக்கு ஏற்றினார்.
சுப்பிரமணி அடிகளார், திருமுருகநாத சாமி அறக்கட்டளை துணைச் செயலாளர் குப்புசாமி, திருமடம் சுந்தரராச அடிகளார், அப்பர்அடி திருக்கூட்டம் சொக்கலிங்க அடிகளார், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களைத் திறந்து வைத்தனர்.
கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் விஸ்வநாதன், ருத்ராபிஷேக குழுத் தலைவர் முருகேசன், தொழில் அதிபர் கீதாலயா முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
0 comments:
Post a Comment