Monday, May 04, 2015
உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி வீட்டுக்குள் பட்டப் பகலில் மர்ம நபர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர் (53). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடும்பத்தாருடன் தளி சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த அனைத்து நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இது குறித்து விசாரித்தனர். மொத்தம் 90 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். லாசர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
.jpg)
0 comments:
Post a Comment