Saturday, May 02, 2015
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
வட பகுதியில் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரயில்வே கடவைகளில் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உடனடியாக மேம்பாடு செய்யப்படாவிட்டால் விபத்துக்கள் தொடரும் அபாயங்கள் உள்ளன என்று பணியாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துக்களில் பலர் உயிரிழந்திருப்பதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலதினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் கார் ஒன்று ரயில்வே கடவையைக் கடந்தபோது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 4 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.
உரிய முறையில் திட்டமிடப்படாததன் காரணமாகவே இந்த விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக உள்ளூர்வாசிகளும் கடவைகளில் பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள்.
அதேவேளை ரயில்வே கடவைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாகவே கடமையாற்றி வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 75 ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்குக் காவல்துறையினரே நியமனம் வழங்கி நாட்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதாகவும் இந்த ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ரயல்வே கடவை காப்பாளர்கள் தங்களுக்கு விளக்குகள் கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல தங்குவதற்கு கூட போதிய இடமில்லை என்றும் அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment