Saturday, May 02, 2015
திமுக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,
தமிழக சட்டசபைக்கு குறிப்பிட்ட 2016 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தாலும், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடந்தாலும் அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. தேர்தலை கண்டு திமுக எப்போதும் அஞ்சியது கிடையாது.
ஆந்திராவில் 20 அப்பாவி கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழக மற்றும் ஆந்திர அரசுகள் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் அப்பாவி தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்கும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவது என உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதலமைச்சருக்கு இருக்கும் உறுதி, அதை தடுப்பதில் தமிழக முதல்வருக்கும் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment