Sunday, May 03, 2015
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை உள்ளூர் நேரம் காலை 08.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார்.
தாயும் சேயும் நலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹாரி மற்றும் இரு குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment