Monday, July 06, 2015
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டாக்டர் சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையை மீட்டு தந்தது வைகோ என்பதை உலகம் அறிந்ததே. இந்த அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த, கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தற்போது அணைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மோடி அரசு, வழக்கம் போல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து மத்திய படை பாதுகாப்பை வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
கேரளத்தின் சதி செயலுக்கு துணை போகும் விதத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களால் அபாயம் ஏற்படும் என்று அபாண்டமாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 7–ந்தேதி, மதுரை காளவாசல் சந்திப்பில் வைகோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது53).இதே ஊரைச்சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (42).சக்திவேல்(43).ராஜ்குமார் (22) ஓரே ஊர...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
0 comments:
Post a Comment